பெட்டாலிங் ஜெயா சாலை தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரி மீது நான்கு சக்கர வண்டியினால் மோதிய இரு அந்நிய பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.
நேற்று இரவு 11 மணியளவில் டமான்சாரா ஜெயா நெடுஞ்சாலையில் புரோடுவா மைவி ரக வாகனத்தில் சென்ற 35 க்கும் 45 க்கும் உட்பட்ட அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா காவல்துறை தலைவர் ஃபக்ருடின் அப்துல் ஹமிட் தெரிவித்தார்.
போலீஸ்காரர் காரால் மோதப்பட்டதில் பலத்த காயங்களுக்கு ஆளாகியிருப்பதாக ஃபக்ருடின் அப்துல் ஹமிட் கூறினார்.
கூர்மையான ஆயுதங்கள் வைத்திருந்த குற்றத்திற்காகவும் 9,839 வெள்ளிக்கும் மேலான வெளிநாட்டு கரன்சிகள் வைத்திருந்ததற்காகவும் ஜனவரி 8 ஆம் தேதி வரை அவ்விருவரும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஃபக்ருடின் அறிவித்தார்.








