Mar 14, 2026
Thisaigal NewsYouTube
மந்தின் கொலைச் சம்பவம்:  'ஹூடி' அணிந்த சந்தேக நபருக்கு போலீஸ் வலைவீச்சு
தற்போதைய செய்திகள்

மந்தின் கொலைச் சம்பவம்: 'ஹூடி' அணிந்த சந்தேக நபருக்கு போலீஸ் வலைவீச்சு

Share:

மந்தின், ஜனவரி.06-

கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி, நெகிரி செம்பிலான் மாநிலம் மந்தின் பகுதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில், கத்திக் குத்துக் காயங்களுடன் ஆடவர் கொலையுண்டு கிடந்த சம்பவத்தில், முக்கியக் குற்றவாளி என சந்தேகிக்கும் நபரைப் போலீசார் தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், முகக்கவசமும், ஹூடியும் அணிந்த ஆடவர் ஒருவர், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில், அப்பகுதியில் உலாவியது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளதாக நீலாய் போலீஸ் தலைவர் ஜொஹாரி யாஹ்யா தெரிவித்துள்ளார்.

கொலையுண்ட நபர் குறித்து, அங்குள்ள பாதுகாவலரிடம் சந்தேக நபர் விசாரித்து விட்டு சென்றதாகவும் ஜொஹாரி குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, கொலையுண்ட நபருடன் ஒரே வீட்டில் தங்கியிருந்த இருவர் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரின் தடுப்புக் காவலை நீட்டிக்க, நீதிமன்றத்தில் இன்று போலீசார் கோரிக்கை விடுக்கவுள்ளனர்.

30 வயதான கொலையுண்ட நபர், தலை, கழுத்து, மார்பு என உடலில் 12 இடங்களில் கத்துக் குத்துக் காயங்களுடன் இறந்து கிடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்