கோத்தாகினபாலு, டிச.13-
தனது வயது குறைந்த மகளை பாலியல் பலாத்காரம் செய்து, கர்ப்பிணியாக்கிய குற்றத்தற்காக தந்தை ஒருவருக்கு கோத்தா கினாபாலு செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 75 ஆண்டு சிறை மற்றும் 15 பிரம்படித் தண்டனை விதித்தது.
கழிவுப்பொருட்கள் அகற்றும் தொழிலாளியான 35 வயது நபர் மீது மொத்தம் 11 குற்றசாட்டுகள் கொண்டு வரப்பட்டன.
இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் ஜுன் மாதம் வரையில் அந்த நபர் தனது வீட்டில் இக்குற்றத்தைப் புரிந்ததாகவும், சம்பந்தப்பட்ட நபரின் இத்தகைய வக்கீர செயலினால் பாதிக்கப்பட்ட அவரின் மகள் தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.








