கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,586 ஆக இன்று உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை நேற்று ஒப்பீடுகையில் அதிகமாக காணப்படுகிறது.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 6,980 குடும்பங்களை 68 தற்காலிக இடமாற்ற மையங்களில் (PPS) பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இன்று காலை 8 மணி வரையில் நிலவரப்படி பசிர் மாஸ்,தானா மேரா, தும்பாட், குவால க்ராய், குவா முசாங் ஆகிய 5 மாவட்டங்கள் வெள்ளப்பெருக்கில் மூழ்கி இருக்கின்றன.








