Apr 5, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

6 சுங்கத்துறை அதிகாரிகள் கைது

Share:

கோலாலம்பூர், ஜன.22-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கே.எல்.ஐ.ஏ சரக்கு மையத்தின் மின் சிகரெட்டுகளை கடத்தும் கும்பலை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். முறியடித்துள்ளது.

ஆறு சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டது மூலம் இந்த கடத்தல் கும்பல் முறியடிக்கப்பட்டதாக எஸ்.பி.ஆர்.எம் தகவல்கள் கூறுகின்றன.

கடத்தல் கும்பலுக்கு உடந்தையாக இருந்து, இந்த சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு துணைப் போன சுங்கத்துறை அதிகாரிகளைக் கண்காணிப்பதற்கு கடந்த மாதம் ஓப் ஏர்வேய்ஸ் என்ற நடவடிக்கையை எஸ்.பி.ஆர்.எம். தொடங்கியது.

கே.எல்.ஐ.ஏ கார்கோ பிரிவிலிருந்து வெளியேறிய இரண்டு லோரிகளை எஸ்.பி.ஆர்.எம். அதிகாரிகள் சோதனை செய்த போது, சுங்கத்துறையின் பரிசோதனையின்றி 19 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள 32 ஆயிரம் மின் சிகரெட்டுகள் கடத்தப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது.

பிடிபட்ட ஆறு சுங்கத்துறை அதிகாரிகளும் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related News

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை