Mar 29, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் மாநில சட்டமன்றம், முன்கூட்டியே கலைக்கப்படுமா?
தற்போதைய செய்திகள்

ஜோகூர் மாநில சட்டமன்றம், முன்கூட்டியே கலைக்கப்படுமா?

Share:

ஜோகூர் பாரு, மே.26-

ஜோகூர் மாநில சட்டமன்றம் முன்கூட்டியே கலைக்கப்படும் என்று கூறப்படுவதை மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காஃஸி மறுத்துள்ளார்.

ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள வேளையில், அதற்கு முன்னதாக மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்படாது என்று அவர் தெளிவுபடுத்தினார்.

நடப்பு சட்டமன்றத்தின் ஐந்து ஆண்டு தவணைக் காலம் வரும் 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பூர்த்தியடைவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

இந்த இரண்டு ஆண்டு காலக் கட்டத்தில் ஜோகூர் இடைக்கால சுல்தானின் ஆணைக்கு ஏற்ப மாநில மேம்பாட்டில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் கவனமும் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Related News