May 1, 2026
Thisaigal NewsYouTube
இபிஎப். சேமிப்பைப் பிணையாக வைத்து பெறப்படும் கடனுக்கு 4.5 விழுக்காடு வட்டி
தற்போதைய செய்திகள்

இபிஎப். சேமிப்பைப் பிணையாக வைத்து பெறப்படும் கடனுக்கு 4.5 விழுக்காடு வட்டி

Share:

தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஎப். சேமிப்பு பணத்தைப், பிணையாக பயன்படுத்தி, சந்தாதாரர்கள், வங்கியில் பெறப்படும் கடனுக்கு ஆண்டுக்கு 4.5 விழுக்காடு வட்டி விதிக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
இது வழக்கமான தனிநபர் கடனுக்கு வங்கிகள் விதிக்கும் வட்டி விகிதத்துடன் ஒப்பிடுகையில் மிக குறைந்த வட்டி விகிதமாக கருதப்படுகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
வர்த்தக வங்கிகளில் தனிநபர் கடனுக்கு 8 முதல் 15 விழுக்காடு வரையில் வட்டி விதிக்கப்படுவதாக நிதி அமைச்சருமான அன்வார் சுட்டிக்காட்டினார்.
55 வயதுக்கு கீழ்பட்ட இபிஎப். சந்தாதாரர்கள், தங்களின் இரண்டாவது கணக்கின் சேமிப்பைப் பிணையாக பயன்படுத்தி வங்கிகளில் இந்தக் கடன் சலுகையைப் பெற முடியும்.
குறைந்த பட்சம் 3 ஆயிரம் வெள்ளியையும், கூடிய பட்சம் 50 ஆயிரம் வெள்ளியையும் அவர்கள் கடனாக பெறலாம் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
எனினும் இந்தக் கடன் வசதி, வங்கிகளால் நிர்ணயிக்கப்படும் ஒப்பந்தம் மற்றும் நிபந்தனைக்கு உட்பட்டதாகும் என்பதையும் பிரதமர் தெளிவுபடுத்தினார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி