சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்ட ஆடவர் ஒருவர், தனது மனைவியை சரமாரியாக தாக்கும் காட்சியைக்கொண்ட காணொளியைத் தொடர்ந்து அந்த சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்டுள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
போர்ட்டிக்சனில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்ததாக கூறப்படும் இச்சம்பவம் தொடர்பில் போலீசார் மேற்கொண்ட புலன் விசாரணையில் ஒரு டெக்னிஷனான 37 வயது ஆடவர், கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக மாவட்ட போலீஸ் தலைவர் ஐடி ஷாம் முகமது குறிப்பிட்டார்.
பாங்கி ஷரியா நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அந்த ஆடவர், தடுப்புக்காவலில் வைக்கப்படுவதற்கு ஏதுவாக நீதிமன்ற ஆணைப் பெறப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.








