சபா மற்றும் சரவாக் செல்லும் விமானக் கட்டணங்கள் அதிகரித்துள்ள நிலையில், பயணச் செலவைக் குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்து பிரதமர் துறை, போக்குவரத்து அமைச்சுடன் கலந்துரையாடவுள்ளது.
பல்வேறு தரப்பினரிடமிருந்து புகார்கள் கிடைத்துள்ள நிலையில், இந்த விவகாரம் அமைச்சரவைக் கூட்டத்திலும் முன்வைக்கப்பட்டதாக பிரதமர் துறையின் சபா மற்றும் சரவாக் விவகார அமைச்சர் டத்தோ முஸ்தபா சக்முட் தெரிவித்தார்.
விமான நிறுவனங்களுடன் இணைந்து கட்டணங்களைக் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும் .
மேலும், செப்டம்பரில் உயர்கல்வி மற்றும் TVET நிறுவனங்களில் கல்வியைத் தொடர விமான பயணம் மேற்கொள்ளும் மாணவர்களின் பயணச் செலவுகள் குறித்தும் கவனம் செலுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.








