May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

Los Angeles காட்டுத் தீ, அமெரிக்காவில் உள்ள மலேசியர்கள் பாதுகாப்புடன் உள்ளனர்

Share:

ஜன.11-

அமெரிக்கா, Los Angelesசில் பேரளவிலான காட்டுத் தீ பரவியுள்ள நிலையில், அங்குள்ள மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியிருக்கிறது. அக்காட்டுத் தீச் சம்பவத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. Washington நில் உள்ள மலேசியத் தூதரகம், Los Angelesசில் உள்ள மலேசியப் பேராளரகம் வாயிலாக Wisma Putra நிலைமையைத் தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக அமைச்சர் Datuk Seri Mohamad Hassanநைத் தொடர்பு கொள்கையில் அவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மலேசியர்களின் பாதுகாப்பு உறுதிச் செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம் அதிகாரத்துவ தரப்பின் உத்தரவுகளைப் பின்பற்றி கவனமாக இருக்குமாறும் உதவி தேவைப்பட்டால் மலேசியப் பேராளரகத்தைத் தொடர்பு கொள்ளுமாறும் அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Californiaவில் ஏற்பட்டுள்ள மாபெரும் காட்டுத் தீ கடந்த பல ஆண்டுகளில் காணாத மிகவும் மோசமானப் பேரிடராகக் கருதப்படுகிறது. அங்கு பல சேதங்கள் ஏற்பட்டுள்ளதோடு குறைந்தது ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர் தத்தம் இருப்பிடங்களைக் காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Related News

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

மஸ்ஜிட் புத்ரா பள்ளிவாசலில் அன்வார் - வான் அஸிஸா தம்பதி சிறப்புத் தொழுகை: 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்

மஸ்ஜிட் புத்ரா பள்ளிவாசலில் அன்வார் - வான் அஸிஸா தம்பதி சிறப்புத் தொழுகை: 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்

நூர் இஸ்ஸாத்தி ஹுமைரா அஸிஸுல் சடலமாக மீட்பு: திடீர் மரணமாக போலீசார் வகைப்படுத்தினர்

நூர் இஸ்ஸாத்தி ஹுமைரா அஸிஸுல் சடலமாக மீட்பு: திடீர் மரணமாக போலீசார் வகைப்படுத்தினர்

சுஹாகாம் அறிக்கை முழுமையாக ஆய்வு செய்யப்படும் - மலேசிய சிறைத் துறை உறுதி

சுஹாகாம் அறிக்கை முழுமையாக ஆய்வு செய்யப்படும் - மலேசிய சிறைத் துறை உறுதி

ஜோகூரில் இராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ள முழு ஆதரவு – ஜோகூர் இளவரசர் அறிவிப்பு

ஜோகூரில் இராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ள முழு ஆதரவு – ஜோகூர் இளவரசர் அறிவிப்பு