மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மின் விசாரணை வளையத்திற்குள் இருக்கின்ற பிரபலங்கள் தொடர்புடைய லஞ்ச ஊழல் வழக்கு விசாரணைகளில் 60 விழுக்காட்டிற்கும் அதிகமான வழக்குகள் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டவையாகும் என்று அதன் சிறப்பு செயலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது.
பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் நலன்சார்ந்தவை என்று கூறப்படும் லஞ்ச ஊழல் தொடர்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு ஜுன் 8 ஆம் தேதி வரை 156 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளதாக அதன் மூத்த இயக்குநர் தான் காங் சாய் தெரிவித்துள்ளார். இவற்றில் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட விசாரணைகளே அதிகமாகும் என்று டான் குறிப்பிட்டார்.
இந்த லஞ்ச ஊழல் விசாரணைகள் தொடர்பில் 211 தனிநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 91 பேர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக டான் விளக்கினார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


