மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மின் விசாரணை வளையத்திற்குள் இருக்கின்ற பிரபலங்கள் தொடர்புடைய லஞ்ச ஊழல் வழக்கு விசாரணைகளில் 60 விழுக்காட்டிற்கும் அதிகமான வழக்குகள் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டவையாகும் என்று அதன் சிறப்பு செயலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது.
பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் நலன்சார்ந்தவை என்று கூறப்படும் லஞ்ச ஊழல் தொடர்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு ஜுன் 8 ஆம் தேதி வரை 156 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளதாக அதன் மூத்த இயக்குநர் தான் காங் சாய் தெரிவித்துள்ளார். இவற்றில் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட விசாரணைகளே அதிகமாகும் என்று டான் குறிப்பிட்டார்.
இந்த லஞ்ச ஊழல் விசாரணைகள் தொடர்பில் 211 தனிநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 91 பேர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக டான் விளக்கினார்.

Related News

மலாய் மொழி மற்றும் வரலாறு பாடத் தேவைகள் குறித்து ஃபாட்லீனாவுடன் டோங் சோங் சந்திப்பு நடத்த விருப்பம்

6 வீடுகளுக்குத் தீ வைப்பு: வேலையற்ற நபர் மீது குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டிருந்த இரு துணை அமைச்சர்களைக் கண்டித்த துணைச் சபாநாயகர்

முதலாம் ஆண்டில் சேர்வதற்கு முன்பாக 6 வயது மாணவர்களுக்குச் சிறப்பு சோதனை - கல்வி அமைச்சர் தகவல்

8 ரிங்கிட் முன்பணம் செலுத்த முயன்று 8,800 ரிங்கிட் இழப்பு: வாட்ஸ்அப் இணைப்பை கிளிக் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்


