Dec 2, 2025
Thisaigal NewsYouTube
இன்ஸ்பெக்டர் ஷீலா மூன்று போலீஸ் புகார்களை அளித்துள்ளார்
தற்போதைய செய்திகள்

இன்ஸ்பெக்டர் ஷீலா மூன்று போலீஸ் புகார்களை அளித்துள்ளார்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.14-

போலீஸ் துறையிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் ஷீலா என்ற ஷீலா ஷெரோன் ஸ்டீவன் குமார், மூன்று போலீஸ் புகார்களை அளித்துள்ளார் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்தார்.

டாங் வாங்கி போலீஸ் நிலையம் அருகில் உள்ள உணவகக் கடைக்காரர் ஒருவருடன் நடந்த சர்ச்சையும் இந்த மூன்று போலீஸ் புகார்களில் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

நேற்று நவம்பர் 13 ஆம் தேதி உணவகக் கடைக்காரரிடம் செல்லத்தக்க லைசென்ஸ் உள்ளதா? என்று கேள்வி எழுப்பியதுடன், அங்கிருந்த வாடிக்கையாளர்களை நோக்கி ஷீலா சத்தம் போட்டதாகக் கூறப்படுகிறது.

அந்த உணவகக் கடைக்காரர், லஞ்சமாக அதிகாரிகளுக்கு இலவச உணவு வழங்குவதாக ஷீலா குற்றஞ்சாட்டிய போது இருவருக்கும் இடையில் சர்ச்சை எழுந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் அரசாங்கப் பணியாளரின் பணிக்கு தாம் இடையூறு விளைவித்ததாகக் கூறி, தாம் கைது செய்யப்பட்ட முறை தொடர்பில் ஷீலா இரண்டாவது போலீஸ் புகாரை அளித்துள்ளார்.

மூன்றாவது புகாரானது, ஒரு மூத்த போலீஸ்காரர் என்ற முறையில் தம்மைச் சாதாரண போலீஸ்காரர்கள் மதிக்கவில்லை என்று ஷீலா புகார் அளித்துள்ளதாக ஃபாடில் மார்சுஸ் தெரிவித்தார்.

எனினும் மூன்றாவது புகாருக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாது. இந்த விவகாரம் போலீஸ் துறையின் நேர்மை மற்றும் நன்னெறிப் பிரிவிடம் ஒப்படைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்