Dec 5, 2025
Thisaigal NewsYouTube
இரும்புத் தடியால் காரை அடித்துச் சேதப்படுத்திய நபரைப் போலீஸ் தேடுகிறது
தற்போதைய செய்திகள்

இரும்புத் தடியால் காரை அடித்துச் சேதப்படுத்திய நபரைப் போலீஸ் தேடுகிறது

Share:

ஜார்ஜ்டவுன், ஜூலை.12-

பினாங்கு, ஜார்ஜ்டவுன், ஜாலான் லெபு பந்தாய் சாலையில் மற்றவரின் காரை இரும்புத் தடியால் அடித்துச் சேதப்படுத்திய நபர் ஒருவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.

சம்பந்தப்பட்ட ஆடவர், தனது காரிலிருந்து இறங்கி, மற்றொரு காரை இரும்புத் தடியால் அடித்துச் சேதப்படுத்தும் காட்சியைக் கொண்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வரும் வேளையில் நேற்று பிற்பகல் 4 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட 25 வயது நபர், போலீசில் புகார் செய்து இருப்பதாக திமோர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் லீ சுவீ சக்கே தெரிவித்துள்ளார்.

பெரோடுவா மைவி காரைச் செலுத்திய சந்தேகப் பேர்வழியின் செயலால் தனது காருக்கு மூவாயிரம் ரிங்கிட் சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்த இளைஞர் தனது போலீஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளார் என்று போலீஸ் அதிகாரி கூறினார்.

Related News

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்