Mar 15, 2026
Thisaigal NewsYouTube
மனைவியைக் கொலை செய்து விட்டு நான்கு நாட்களுக்குப் பிறகு போலீசுக்குத் தகவல் அளித்த கணவர்
தற்போதைய செய்திகள்

மனைவியைக் கொலை செய்து விட்டு நான்கு நாட்களுக்குப் பிறகு போலீசுக்குத் தகவல் அளித்த கணவர்

Share:

செபராங் ஜெயா, டிசம்பர்.11-

பினாங்கு, செபராங் ஜெயாவில் உள்ள தனது வீட்டில் நான்கு நாட்களுக்கு முன்பு தனது மனைவியைக் கொலை செய்ததாக நம்பப்படும் ஆடவர் ஒருவர், அந்தக் கொலை குறித்து இன்று போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

மனைவியின் சடலத்தை கடந்த நான்கு நாட்களாக வீட்டில் வைத்திருந்த 28 வயதுடைய நபர், இன்று காலையில் போலீஸ் நிலையத்திற்கு நேரடியாக வந்து சரண் அடைந்துள்ளார். இந்தச் சம்பவம், செபராங் ஜெயா, ஜாலான் தூனாவில் உள்ள அடுக்குமாடி வீடொன்றில் நிகழ்ந்தது.

தகவல் கிடைத்து அந்த வீட்டைச் சோதனைச் செய்த போலீசார், அறை ஒன்றில் கழுத்தில் ஆழமான வெட்டுக் காயங்களுடன் 44 வயது மாது ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டுபிடித்தனர்.

புலன் விசாரணைக்கு ஏதுவாக ஒரு வேலையற்ற நபரான அந்த ஆடவரைப் போலீசார் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்