May 6, 2026
Thisaigal NewsYouTube
மனைவியைக் கொலை செய்து விட்டு நான்கு நாட்களுக்குப் பிறகு போலீசுக்குத் தகவல் அளித்த கணவர்
தற்போதைய செய்திகள்

மனைவியைக் கொலை செய்து விட்டு நான்கு நாட்களுக்குப் பிறகு போலீசுக்குத் தகவல் அளித்த கணவர்

Share:

செபராங் ஜெயா, டிசம்பர்.11-

பினாங்கு, செபராங் ஜெயாவில் உள்ள தனது வீட்டில் நான்கு நாட்களுக்கு முன்பு தனது மனைவியைக் கொலை செய்ததாக நம்பப்படும் ஆடவர் ஒருவர், அந்தக் கொலை குறித்து இன்று போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

மனைவியின் சடலத்தை கடந்த நான்கு நாட்களாக வீட்டில் வைத்திருந்த 28 வயதுடைய நபர், இன்று காலையில் போலீஸ் நிலையத்திற்கு நேரடியாக வந்து சரண் அடைந்துள்ளார். இந்தச் சம்பவம், செபராங் ஜெயா, ஜாலான் தூனாவில் உள்ள அடுக்குமாடி வீடொன்றில் நிகழ்ந்தது.

தகவல் கிடைத்து அந்த வீட்டைச் சோதனைச் செய்த போலீசார், அறை ஒன்றில் கழுத்தில் ஆழமான வெட்டுக் காயங்களுடன் 44 வயது மாது ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டுபிடித்தனர்.

புலன் விசாரணைக்கு ஏதுவாக ஒரு வேலையற்ற நபரான அந்த ஆடவரைப் போலீசார் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்