Jun 29, 2026
Thisaigal NewsYouTube
மனைவியைக் கொலை செய்து விட்டு நான்கு நாட்களுக்குப் பிறகு போலீசுக்குத் தகவல் அளித்த கணவர்
தற்போதைய செய்திகள்

மனைவியைக் கொலை செய்து விட்டு நான்கு நாட்களுக்குப் பிறகு போலீசுக்குத் தகவல் அளித்த கணவர்

Share:

செபராங் ஜெயா, டிசம்பர்.11-

பினாங்கு, செபராங் ஜெயாவில் உள்ள தனது வீட்டில் நான்கு நாட்களுக்கு முன்பு தனது மனைவியைக் கொலை செய்ததாக நம்பப்படும் ஆடவர் ஒருவர், அந்தக் கொலை குறித்து இன்று போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

மனைவியின் சடலத்தை கடந்த நான்கு நாட்களாக வீட்டில் வைத்திருந்த 28 வயதுடைய நபர், இன்று காலையில் போலீஸ் நிலையத்திற்கு நேரடியாக வந்து சரண் அடைந்துள்ளார். இந்தச் சம்பவம், செபராங் ஜெயா, ஜாலான் தூனாவில் உள்ள அடுக்குமாடி வீடொன்றில் நிகழ்ந்தது.

தகவல் கிடைத்து அந்த வீட்டைச் சோதனைச் செய்த போலீசார், அறை ஒன்றில் கழுத்தில் ஆழமான வெட்டுக் காயங்களுடன் 44 வயது மாது ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டுபிடித்தனர்.

புலன் விசாரணைக்கு ஏதுவாக ஒரு வேலையற்ற நபரான அந்த ஆடவரைப் போலீசார் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.

Related News

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு