கடந்த 1976 ஆம் ஆண்டு, சபா முதலமைச்சர் ஃபுவாட் ஸ்டீபன்ஸ் உட்பட 11 பேர் உயிரிழந்த விமான விபத்து தொடர்பான கூட்டரசு விசாரணை அறிக்கையின் உள்ளடக்கம், பகிங்கரப்படுத்தப்படும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்துள்ளார்.
47 ஆண்டுகளுக்கு முன்பு கோத்தா கினாபாலுவில் நிகழ்ந்த இந்தக் கோர விமான விபத்தில் உண்மையிலே என்ன நடந்தது என்பது குறித்து அறிய பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும், சபா மக்களும் வேட்கை கொண்டிருப்பதை தாம் உணர்ந்த போதிலும், அந்த அறிக்கையின் உள்ளடக்கம் அம்பலப்படுத்தப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
முக்கியத் தலைவர் ஒருவர் உயிரிழந்த இவ்விபத்து தொடர்பான, விசாரணை அறிக்கை 1972 ஆம் ஆண்டு ரகசிய காப்புச்சட்டத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் வெளிப்படையான போக்கைக் கொண்டிருப்பதால், அதன் உள்ளடக்கம் பகிங்கரப்படுத்தப்படும் என்று பிரதமர் உறுதி கூறினார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


