கடந்த 1976 ஆம் ஆண்டு, சபா முதலமைச்சர் ஃபுவாட் ஸ்டீபன்ஸ் உட்பட 11 பேர் உயிரிழந்த விமான விபத்து தொடர்பான கூட்டரசு விசாரணை அறிக்கையின் உள்ளடக்கம், பகிங்கரப்படுத்தப்படும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்துள்ளார்.
47 ஆண்டுகளுக்கு முன்பு கோத்தா கினாபாலுவில் நிகழ்ந்த இந்தக் கோர விமான விபத்தில் உண்மையிலே என்ன நடந்தது என்பது குறித்து அறிய பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும், சபா மக்களும் வேட்கை கொண்டிருப்பதை தாம் உணர்ந்த போதிலும், அந்த அறிக்கையின் உள்ளடக்கம் அம்பலப்படுத்தப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
முக்கியத் தலைவர் ஒருவர் உயிரிழந்த இவ்விபத்து தொடர்பான, விசாரணை அறிக்கை 1972 ஆம் ஆண்டு ரகசிய காப்புச்சட்டத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் வெளிப்படையான போக்கைக் கொண்டிருப்பதால், அதன் உள்ளடக்கம் பகிங்கரப்படுத்தப்படும் என்று பிரதமர் உறுதி கூறினார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


