லஞ்ச ஊழல் தொடர்பில் உள்துறை அமைச்சின் இரண்டு இலாகாக்கள் தற்போது விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். மலேசிய குடிநுழைவுத்துறை மற்றும் தேசிய பதிவு இலாகாவான ஜேபிஎன் ஆகியவை தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாக பிரதமர் குறிபிட்டார். நேற்று ஞாயிற்றுக்கிழமை சிப்பாங், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு தாம் திடீர் வருகை புரிந்த போது, குடிநுழைவுத்துறை அதிகாரிகளில் ஒரு சிறு பிரிவினர் இன்னமும் லஞ்ச ஊழலில் திளைத்து இருப்பதை காண முடிந்ததாக டத்தோஸ்ரீ அன்வார் தெரிவித்தார். இன்று காலையில் புத்ராஜெயாவில் பிரதமர் துறை பணியாளரிகளின் மாதாந்திர பேரணிக்கு தலைமையேற்று உரையாற்றுகையில் அன்வார் இவ்விவரத்தை வெளியிட்டார்.

Related News

மலாய் மொழி மற்றும் வரலாறு பாடத் தேவைகள் குறித்து ஃபாட்லீனாவுடன் டோங் சோங் சந்திப்பு நடத்த விருப்பம்

6 வீடுகளுக்குத் தீ வைப்பு: வேலையற்ற நபர் மீது குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டிருந்த இரு துணை அமைச்சர்களைக் கண்டித்த துணைச் சபாநாயகர்

முதலாம் ஆண்டில் சேர்வதற்கு முன்பாக 6 வயது மாணவர்களுக்குச் சிறப்பு சோதனை - கல்வி அமைச்சர் தகவல்

8 ரிங்கிட் முன்பணம் செலுத்த முயன்று 8,800 ரிங்கிட் இழப்பு: வாட்ஸ்அப் இணைப்பை கிளிக் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்


