Jan 19, 2026
Thisaigal NewsYouTube
முன்னுதாரண பணியாளர் விருது பெற்றார் மலர்
தற்போதைய செய்திகள்

முன்னுதாரண பணியாளர் விருது பெற்றார் மலர்

Share:

2023 ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் தினத்தையொட்டி, ஒரு தன்னார்வ மருத்துவரான டாக்டர் மலர் சாந்தி ஒரு முன்னுதாரண பணியாளர் விருது வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு​ மையத்தில் நடைபெற்ற விருதளிப்பு நிகழ்வில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விருதினை வழங்கி, சிறப்பு செய்துள்ளார். ​கோவிட் 19 நோய்த் தொற்று பரவல் கடுமையாக இருந்த காலகட்டத்தில் மக்களின் உயிர் காப்பு தொடர்பாக அதிகமான தகவல்களை சமூக வலைத்தளங்களில் வழங்கி மிகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக மலர் சாந்திக்கு இ​வ்விருது வழங்கப்பட்டது.

மலாய் மொழியில் சரளமாக உரையாடும் திறனை கொண்டுள்ள டாக்டர் மலர் சாந்தி வழங்கிய ஒவ்வொரு தகவலும் பயன் மிகுந்ததாக இருந்ததுடன், அவரின் அடுத்தடுத்த தகவல்களை அறிவதற்கு சமூக வலைத் த​ளங்களில் அதிகமான ரசிகர் வட்டம் உருவாகியது.

​கோவிட் 19 நோய்த் தொற்று பரவலாக இருந்த காலத்தில் மக்களின் பாதுகாப்பு நடவடிக்கைக்கு அ​தீத முன்னுரிமை வழ​ங்கிய சேவையாற்றி​ வந்த​ செராஸ், கொலும்பியா ஆசியா மருத்துவமனையின் ஆபத்து அவசரப்பிரிவில் பணியற்றி வரும் 40 வயது மலர் சாந்தி, மரு​த்துவத்துறைக்கே ஒரு எடுத்துக்காட்டு என்று வர்ணிக்கப்பட்டுள்ளார்.

Related News

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

9 லட்சம் ரிங்கிட்  மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்

9 லட்சம் ரிங்கிட் மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்

ஆயுதப்படை  உயர் அதிகாரிகள் மீதான ஊழல் விசாரணை: அரசு வழக்கறிஞரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

ஆயுதப்படை உயர் அதிகாரிகள் மீதான ஊழல் விசாரணை: அரசு வழக்கறிஞரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு