2023 ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் தினத்தையொட்டி, ஒரு தன்னார்வ மருத்துவரான டாக்டர் மலர் சாந்தி ஒரு முன்னுதாரண பணியாளர் விருது வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற விருதளிப்பு நிகழ்வில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விருதினை வழங்கி, சிறப்பு செய்துள்ளார். கோவிட் 19 நோய்த் தொற்று பரவல் கடுமையாக இருந்த காலகட்டத்தில் மக்களின் உயிர் காப்பு தொடர்பாக அதிகமான தகவல்களை சமூக வலைத்தளங்களில் வழங்கி மிகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக மலர் சாந்திக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
மலாய் மொழியில் சரளமாக உரையாடும் திறனை கொண்டுள்ள டாக்டர் மலர் சாந்தி வழங்கிய ஒவ்வொரு தகவலும் பயன் மிகுந்ததாக இருந்ததுடன், அவரின் அடுத்தடுத்த தகவல்களை அறிவதற்கு சமூக வலைத் தளங்களில் அதிகமான ரசிகர் வட்டம் உருவாகியது.
கோவிட் 19 நோய்த் தொற்று பரவலாக இருந்த காலத்தில் மக்களின் பாதுகாப்பு நடவடிக்கைக்கு அதீத முன்னுரிமை வழங்கிய சேவையாற்றி வந்த செராஸ், கொலும்பியா ஆசியா மருத்துவமனையின் ஆபத்து அவசரப்பிரிவில் பணியற்றி வரும் 40 வயது மலர் சாந்தி, மருத்துவத்துறைக்கே ஒரு எடுத்துக்காட்டு என்று வர்ணிக்கப்பட்டுள்ளார்.

Related News

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

சிலாங்கூர் சிஐடி போலீஸ் அதிகாரி மர்ம மரணம் - ஷா ஆலம் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்ததாக சந்தேகம்

சிறைபிடிக்கப்பட்டுள்ள 25 மலேசியர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் / இஸ்ரேலிய படையினரிடம் மலேசியா வலியுறுத்தல்

அரசாங்க சுகாதார நிலையத்தில் சீன மொழியில் கண்காணிப்பு அட்டை வழங்கப்பட்டது எப்படி? - சுகாதாரத்துறை விளக்கம்

சிலாங்கூரில் வேப் திரவத்தில் போதைப் பொருள் கலந்து விற்பனை - 6 பேர் கைது


