வரும் மே 13 ஆம் தேதி சனிக்கிழமை, மாலை 6 மணிக்கு கோலாலம்பூர், ஶ்ரீ மஹா மாரியம்மன் கோயில் தேவஸ்தான மண்டபத்தில் இன்னிசை பாட்டு மன்றம் நடைபெறவிருக்கிறது. கவியரசு கண்ணதாசன் பாடல்களில் மக்கள் மனங்களில் அதிகம் கவர்ந்தது காதல் பாடல்களா? தத்துவ பாடல்களா? பக்தி பாடல்களா? எனும் தலைப்பில் இந்த இன்னிசை பாட்டு மன்றம் நடைபெறவுள்ளது. தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ ஆர். நடராஜா தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் டத்தோ ஶ்ரீ டாக்டர் எம்.சரவணன் சிறப்பு வருகை புரிவார்.
இந்நிகழ்வின் நடுவருராக தமிழ்நாடு, பாண்டிச்சேரியிருந்து தொலைக்காட்சி புகழ் செந்தமிழ் அருவி, கலக்கல் காங்கேயனும் அரக்கணம், சென்னை மற்றும் பாண்டிச்சேரியிலிருந்து 4 பேச்சாளர்களும் 3 இசைக்கலைஞர்களும் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.
இந்த இன்னிசை பாட்டு மன்றம் நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ளும்படி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்


