கிள்ளான் பள்ளத்தாக்கில் இன்று மாலை பெய்த கனமழை காரணமாக, பல்வேறு பகுதிகளில் திடீர் வெள்ளம் சூழ்ந்ததுடன் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
கின்ராராவிலிருந்து அவான் பெசார் நோக்கிச் செல்லும் ஷா ஆலாம் அதிவேக நெடுஞ்சாலையான கேசாஸ்-இன் கி.மீ. 48.0 பகுதியில், மாலையில் திடீர் வெள்ளம் பதிவாகியதால் சுமார் நான்கு கிலோமீட்டர் வரையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும், குச்சாய் இணைப்பு வழியாக நியூ பந்தாய் அதிவேக நெடுஞ்சாலை நோக்கிச் செல்லும் பாதையிலும், மாஜு ஜெயா நோக்கி செல்லும் கி.மீ. 18.9 பகுதியிலும் வெள்ளம் ஏற்பட்டதாக மலேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
இதனால் வாகனங்கள் மெதுவாக நகரும் நிலை ஏற்பட்டதுடன், சாலையொன்று முழுமையாக நீரில் மூழ்கியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.








