Feb 27, 2026
Thisaigal NewsYouTube
சுபாங் டெப்போ விபத்து: ராபிட் ரயில் நிறுவனத்திற்கு ஒரு லட்சம் ரிங்கிட் அபராதம்
தற்போதைய செய்திகள்

சுபாங் டெப்போ விபத்து: ராபிட் ரயில் நிறுவனத்திற்கு ஒரு லட்சம் ரிங்கிட் அபராதம்

Share:

பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி.27-

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சுபாங் டெப்போவில் ஒருவரின் உயிரிழப்பிற்கு காரணமான இயந்திர மோதல் விபத்து தொடர்பாக, Rapid Rail Sdn Bhd நிறுவனத்திற்கு தரைப் போக்குவரத்து ஏஜென்சியான APAD ஒரு லட்சம் ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது.

கடந்த 2024 டிசம்பர் 12-ஆம் தேதி நிகழ்ந்த இந்த விபத்தில் ராபிட் ரயில் நிறுவனத்தால் இயக்கப்பட்ட Shunting இயந்திரம், அதன் தயாரிப்பாளர் வழங்கிய பராமரிப்பு நெறிமுறைகளைப் பின்பற்றாததால் சரியாகச் செயல்படத் தவறியது.

இயந்திரத்தின் பிரேக் அமைப்பு செயலிழந்ததால், அது Speeder 3 என்ற மற்றொரு இயந்திரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் ராபிட் ரயில் நிறுவன ஊழியர் ஒருவர் பலியானார். மேலும் மூவர் காயமடைந்தனர்.

தவிர 'Grinder', 'Speeder 3' மற்றும் 'Shunting' ஆகிய இயந்திரங்கள் பலத்த சேதமடைந்ததாக சுட்டிக் காட்டப்பட்டது. இந்த இழப்பின் மொத்த மதிப்பு 5 லட்சத்து 74 ஆயிரத்து 550 ரிங்கிட் என தெரிவிக்கப்பட்டது.

பொதுப் போக்குவரத்து ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்யத் தவறியதற்காகவும், பராமரிப்பு விதிமுறைகளை மீறியதற்காகவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அபாட் தெரிவித்துள்ளது.

Related News

டிக் டாக் மூலம் பழகி 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆடவருக்கு 10 ஆண்டுகள் சிறை

டிக் டாக் மூலம் பழகி 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆடவருக்கு 10 ஆண்டுகள் சிறை

ஷாம்சுல் ஹரிஸ் மரணம்: "கொலை வழக்கை ஏன் மாற்றினீர்கள்?" - பாதிக்கப்பட்ட மாணவரின் தாயார் கேள்வி

ஷாம்சுல் ஹரிஸ் மரணம்: "கொலை வழக்கை ஏன் மாற்றினீர்கள்?" - பாதிக்கப்பட்ட மாணவரின் தாயார் கேள்வி

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி செய்தேனா?  முன்னாள் நிதி அமைச்சர் துன் டாயிமின் துணைவியார் மறுப்பு

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி செய்தேனா? முன்னாள் நிதி அமைச்சர் துன் டாயிமின் துணைவியார் மறுப்பு

பக்கத்து வீட்டுக்காரரால் சுடப்பட்ட முதியவர் உயிரிழப்பு

பக்கத்து வீட்டுக்காரரால் சுடப்பட்ட முதியவர் உயிரிழப்பு

ஜோகூர் வழக்கறிஞர்கள் மன்றத்தின் புதிய தலைவராக மூத்த வழக்கறிஞர் அனுஷா ராகவன் தேர்வு

ஜோகூர் வழக்கறிஞர்கள் மன்றத்தின் புதிய தலைவராக மூத்த வழக்கறிஞர் அனுஷா ராகவன் தேர்வு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் உடல்நலக் குறைவு:  மக்கள் பிரார்த்தனை செய்யுமாறு வேண்டுகோள்

மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் உடல்நலக் குறைவு: மக்கள் பிரார்த்தனை செய்யுமாறு வேண்டுகோள்