கடந்த செவ்வாய்கிழமை, பினாங்கு, Bayan Lepas Persiaran Bayan Indah வில் உள்ள ஓர் உணவகத்தில் நிகழ்ந்த ஆயுதம் தாங்கிய தாக்குதல் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
44 க்கும் 68 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த மூவரும் காயம் விளைவித்தல் குற்றவியல் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக barat daya மாவட்ட போலீஸ் துணைத் தலைவர், Superintendan Jafri Md Zin தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட உணவகத்தின், உணவு விநியோகிப்பாளருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையில் நிகழ்ந்த வாய்ச்சண்டை பின்னர் கைகலப்பாக மாறியதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த கைகலப்பு தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
தவிர, இச்சம்பவம் தொடர்பில் 66 வயது முதியவிரிடமிருந்து போலீஸ் புகார் பெறப்பட்டுள்ளதாகவும் Jafri Md Zin தெரிவித்தார்.








