Feb 23, 2026
Thisaigal NewsYouTube
ஜசெக சிறப்பு மாநாடு: உறுப்பினர்கள், பொதுமக்களிடமிருந்து கருத்துகளும், விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன
தற்போதைய செய்திகள்

ஜசெக சிறப்பு மாநாடு: உறுப்பினர்கள், பொதுமக்களிடமிருந்து கருத்துகளும், விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன

Share:

பட்டர்வொர்த், பிப்ரவரி.23-

எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள ஜசெக கட்சியின் சிறப்பு மாநாட்டிற்கு முன்னதாக, அக்கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உட்பட பினாங்கு மக்கள் தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

வரும் ஜூலை 12 ஆம் தேதி நடைபெறும் இம்மாநாட்டின் போது, சேகரிக்கப்பட்ட விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் அனைத்தும், பிரதிநிதிகளால் பரிசீலனை செய்யப்படும் என்று ஜசெக மத்திய செயற்குழு உறுப்பினரும், பினாங்கு முதலமைச்சருமான சாவ் கோன் இயாவ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஒற்றுமை அரசாங்கத்திற்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும் அதே வேளையில், கட்சியின் தலைவர்கள் அனைத்து அரசாங்கப் பதவிகளில் இருந்தும் விலக வேண்டுமா? என்பது இந்த சிறப்பு மாநாட்டில் முடிவு செய்யப்படும் என்றும் சாவ் கோன் இயாவ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பொதுமக்கள் தங்களது விமர்சனங்களை, ஜசெக உறுப்பினர்கள் மூலமாகவோ, சமூக ஊடகங்களின் மூலமாகவோ அல்லது ஜசெக கட்சிக்கு மின்னஞ்சல் மற்றும் கடிதங்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News

மலேசியாவில் நிபா வைரஸ் தொற்று பதிவாகவில்லை: தீவிர கண்காணிப்புகளும், தடுப்பு நடவடிக்கைகளும் தொடர்வதாக DVS அறிவிப்பு

மலேசியாவில் நிபா வைரஸ் தொற்று பதிவாகவில்லை: தீவிர கண்காணிப்புகளும், தடுப்பு நடவடிக்கைகளும் தொடர்வதாக DVS அறிவிப்பு

சபா வெள்ளம்: 4000-த்திற்கும் அதிகமானோர் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

சபா வெள்ளம்: 4000-த்திற்கும் அதிகமானோர் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

ஜிஎஸ்டி-யை மீண்டும் அமல்படுத்தாமல் இருப்பது அரசியல் ரீதியாக ஆபத்து - முன்னாள் துணையமைச்சர் கருத்து

ஜிஎஸ்டி-யை மீண்டும் அமல்படுத்தாமல் இருப்பது அரசியல் ரீதியாக ஆபத்து - முன்னாள் துணையமைச்சர் கருத்து

பினாங்கு பெட்ரோல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் பெண் இறந்து கிடந்தார்

பினாங்கு பெட்ரோல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் பெண் இறந்து கிடந்தார்

8 மில்லியன் ரிங்கிட் லஞ்ச மோசடி: முன்னாள் டெல்கோ இயக்குநர் கைது

8 மில்லியன் ரிங்கிட் லஞ்ச மோசடி: முன்னாள் டெல்கோ இயக்குநர் கைது

சபாவில் 6.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை இல்லை

சபாவில் 6.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை இல்லை