மலேசியாவில் நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக இதுவரை 41 பேர் உடல்நலப் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அகமட் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களில் 35 பேருக்கு வெப்ப சோர்வும் , 5 பேருக்கு வெப்ப வாதமும் , ஒருவருக்கு வெப்ப தசைப்பிடிப்பும் ஏற்பட்டுள்ளது. எனினும், நேற்று புதிய பாதிப்புகள் ஏதும் பதிவாகவில்லை.
தற்போதைய நிலவரப்படி, பெர்லிஸ், கெடா, கிளந்தான், பேராக் மற்றும் பகாங் ஆகிய மாநிலங்களின் பல பகுதிகள் 'நிலை 1' எச்சரிக்கை மட்டத்தில் உள்ளன. குறிப்பாக கிளந்தானின் மச்சாங் மாவட்டம் 'நிலை 2' வெப்ப அலை மட்டத்தை எட்டியுள்ளது. பொதுமக்கள் போதிய அளவு தண்ணீர் அருந்தவும், தேவையற்ற வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்கவும் சுகாதார அமைச்சர் ச அறிவுறுத்தியுள்ளார்.








