தங்களின் அன்புக்குரியவர்களை அல்லது நேசத்திற்குரியவர்களைச் சயாங் என்று அழைக்கப்படும் வார்த்தையைப் பணிமனைகளில் பயன்படுத்துவதற்குப் பொதுச் சேவைத்துறைத் தடை விதித்துள்ளது. அன்புத் தொல்லையால் வசப்பட்டவர்கள், அடிக்கடி பயன்படுத்தப்படும் சயாங் என்ற சொல், பணிமனைகளில் தற்போது ஒருவகையான பாலியல் தொல்லையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுச் சேவைத்துறை என்று அழைக்கப்படும் அரசு ஊழியர்கள் மத்தியில் அந்தரங்க தொடர்புகளுக்கு வழிகோலும் சயாங் என்ற சொல், ஒருவரின் மனதில் இடம் பெறுவதற்கும், தனது விருப்பத்தை மறைமுகமாக தெரிவிப்பதற்கும் ஓர் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரசு ஊழியர்கள் மத்தியல் சயாங் என்ற சொல்லுக்கு இனி தடா என்று கூறி, கடந்த மாதம் பிற்பகுதியில் பொதுச் சேவைத்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி


