தங்களின் அன்புக்குரியவர்களை அல்லது நேசத்திற்குரியவர்களைச் சயாங் என்று அழைக்கப்படும் வார்த்தையைப் பணிமனைகளில் பயன்படுத்துவதற்குப் பொதுச் சேவைத்துறைத் தடை விதித்துள்ளது. அன்புத் தொல்லையால் வசப்பட்டவர்கள், அடிக்கடி பயன்படுத்தப்படும் சயாங் என்ற சொல், பணிமனைகளில் தற்போது ஒருவகையான பாலியல் தொல்லையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுச் சேவைத்துறை என்று அழைக்கப்படும் அரசு ஊழியர்கள் மத்தியில் அந்தரங்க தொடர்புகளுக்கு வழிகோலும் சயாங் என்ற சொல், ஒருவரின் மனதில் இடம் பெறுவதற்கும், தனது விருப்பத்தை மறைமுகமாக தெரிவிப்பதற்கும் ஓர் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரசு ஊழியர்கள் மத்தியல் சயாங் என்ற சொல்லுக்கு இனி தடா என்று கூறி, கடந்த மாதம் பிற்பகுதியில் பொதுச் சேவைத்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


