பள்ளிகளில் கணிதம் மற்றும் அறிவியல் ஆகிய இரு பாடங்களை ஆங்கிலத்தில் போதிக்கும் நடைமுறையை மறுபடியும் அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கேட்டுக்கொண்டுள்ளார்.
தம்முடைய ஆட்சிக் காலத்தில் 2003 ஆம் ஆண்டில் தாம் அறிமுகப்படுத்திய கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் போதிக்கும் நடைமுறையை மறுபடியும் பள்ளிகளில் நடைமுறைப்படுத்துவது அவசியமான ஒன்றாகும் என்று துன் மகாதீர் வலியுறுத்தினார்.
அறிவியலிலும் கணிதத்திலும் உள்ள பாடத்திட்டங்கள் ஆங்கிலமொழியில் இருப்பதால் அப்பாடங்களை கற்றல், கற்பித்தலுக்கு அம்மொழியிலேயே கற்பதுதான் பலன் அளிக்குமே தவிர அதனை மொழிப்பெயர்த்து படிப்பதால் அப்பாடங்களின் ஆழத்தைக் கண்டறிவது மாணவர்களுக்கு சிரமமாகி விடலாம் என்று துன் மகாதீர் நினைவுறுத்தியுள்ளார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


