பள்ளிகளில் கணிதம் மற்றும் அறிவியல் ஆகிய இரு பாடங்களை ஆங்கிலத்தில் போதிக்கும் நடைமுறையை மறுபடியும் அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கேட்டுக்கொண்டுள்ளார்.
தம்முடைய ஆட்சிக் காலத்தில் 2003 ஆம் ஆண்டில் தாம் அறிமுகப்படுத்திய கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் போதிக்கும் நடைமுறையை மறுபடியும் பள்ளிகளில் நடைமுறைப்படுத்துவது அவசியமான ஒன்றாகும் என்று துன் மகாதீர் வலியுறுத்தினார்.
அறிவியலிலும் கணிதத்திலும் உள்ள பாடத்திட்டங்கள் ஆங்கிலமொழியில் இருப்பதால் அப்பாடங்களை கற்றல், கற்பித்தலுக்கு அம்மொழியிலேயே கற்பதுதான் பலன் அளிக்குமே தவிர அதனை மொழிப்பெயர்த்து படிப்பதால் அப்பாடங்களின் ஆழத்தைக் கண்டறிவது மாணவர்களுக்கு சிரமமாகி விடலாம் என்று துன் மகாதீர் நினைவுறுத்தியுள்ளார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


