Jul 29, 2026
Thisaigal NewsYouTube
பேரா - பினாங்கு தண்ணீர் உடன்படிக்கை : 6  முதல் 8 ஆண்டுகள் ஆகலாம்
தற்போதைய செய்திகள்

பேரா - பினாங்கு தண்ணீர் உடன்படிக்கை : 6  முதல் 8 ஆண்டுகள் ஆகலாம்

Share:

ஜோர்ஜ் டவுன், ஜன - 5,

பேரா மாநிலத்துடனான தண்ணீர் உடன்படிக்கை இன்னும் தொடங்கப்பட வில்லை எனவும் , அது நிறைவேற ஆறு முதல் எட்டு ஆண்டுகள் வரை ஆகலாம் என்று பினாங்கு முதலமைச்சர் சோவ் கோந் இயோவ் கூறினார்.

பினாங்குக்கு தண்ணீர் அனுப்ப புத்ராஜெயா ஒரு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நிதியை இன்னும் ஒதுக்காததால், இந்த ஆண்டு திட்டம் தொடங்கப்படாது என்று பேரா மாநில மந்திரி பெசார் சாரணி முகமட்டின் அறிக்கை குறித்து கருத்துரைக்கயில், சோவ் அவ்வாறு கூறினார்.

எதிர்வரும் 2030 ஆம் ஆண்டில், பினாங்கு மாநிலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய சாத்தியம் இருப்பதால், பேரா மாநிலத்தின் சுங்கை மூடாவில் இருந்து சுத்திகஎஇக்கப்படாத தண்ணீரை பினாங்கு மாநிலத்திற்கு விநியோகம் செய்ய இந்த உடன்படிக்கை குறித்து பேசப்பட்டு வந்தது.

ஆனால், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை பினாங்கிற்கு வழங்க பேரா அரசாங்கம் ஒரு சுத்திகரிப்பு நிலையத்தை பேரா மாநில அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது.

எனவே, அந்த சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்கும் விவகாரத்துல் பினாங்கு மாநில அரசு தலையிடாது எனக் கூறிய சோவ், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரின் விலை இன்னும் முடிவு செய்யப்பட வில்லை எனவும் தேசிய தண்ணீர் சேவை ஆணையமான SPAN உடன் பேச்சு வார்த்தையில் இருப்பதாகவும் சோவ் மேலும் கூறினார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்