மிகப்பெரிய ஊழலுக்கு வித்திடப்பட்ட 1 எம்.டி.பி விவகாரம் மற்றும் அந்த ஊழலுக்கு முக்கிய காரணமானவர் என்று சந்தேகிக்கப்படும் மலேசிய தொழில் அதிபர் ஜோ லோவை தேடும் முயற்சி ஆகியவற்றை அரச மலேசிய போலீஸ் படை கைவிடவில்லை என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
ஜோ லோவுடன் வர்த்தகத் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் முன்னாள் பெண் வழக்கறிஞர் ஜாஸ்மின் லூ ஐ ஸ்வான் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டது மூலம் 1எம்.டி.பி விவகாரம் முற்றுப் பெறவில்லை. மாறாக, அதில் சம்பந்தப்பட்டுள்ள நபர்களுக்கு எதிரான போலீசாரின் தேடுதல் வேட்டை தொடர்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக ரஸாருதீன் ஹுசைன் குறிப்பிட்டார்.

Related News

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி


