May 26, 2026
Thisaigal NewsYouTube
26 ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டது
தற்போதைய செய்திகள்

26 ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டது

Share:

டிச. 22-

சிலாங்கூர் சாலைப் போக்குவரத்துத் துறை நடத்திய சிறப்பு சோதனையில் ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்களில் சீட் பெல்ட் அணியாதது, நிர்ணயிக்கப்பட்ட விவரக்குறிப்புகளை பூர்த்தி செய்யாத வாகனங்களைப் பயன்படுத்துதல் போன்ற தவறுகள் கண்டறியப்பட்டன. இந்த சோதனை 26 ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்களில் நடத்தப்பட்டதாக இலாங்கூர் மாநில சாலைப் போக்குவரத்துத் துறையின் இயக்குநர் Azrin Borhan தெரிவித்தார்,

இந்த சோதனையில் 164 பயிற்சி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. பயிற்சி ஆசிரியர்கள் சீட் பெல்ட் அணியாதது, வாகனங்களின் தொழில்நுட்ப குறைபாடுகள் முக்கிய தவறுகளாக கண்டறியப்பட்டன. பல்வேறு தவறுகளுக்காக ஏழு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.

வாகன ஓட்டுநர் பயிற்சி நிறுவனத்தின் அனுமதி, பயிற்சி ஆசிரியர்களின் சான்றிதழ், பயிற்சிக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களின் தரம் ஆகியவை சோதனையின் முக்கிய அம்சங்களாக இருந்தன. பயிற்சி நிறுவனங்கள் அனைத்து விதிகளையும் பின்பற்றுவதை உறுதி செய்வதே சோதனையின் நோக்கம் என Azrin Borhan குறிப்பிட்டார்,

வாகன ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்கள் சட்டத்தை பின்பற்றுவதன் மூலமும், சிறந்த சேவையை வழங்குவதன் மூலமும் திறமையான ஓட்டுநர்களை உருவாக்க முடியும் என்று JPJ வலியுறுத்தியுள்ளது. மேலும், தொடர்ச்சியான சோதனைகள் மூலம் நிறுவனங்கள் விதிகளை பின்பற்றுவது உறுதி செய்யப்படும் என்று Azrin Borhan மேலும் தெரிவித்தார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு