ஒற்றுமை அரசாங்கத்திற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையேற்று ஓராண்டு பூர்த்தியாகவிருக்கும் நிலையில் அவரின் தலைமைத்துவத் திறனில் பெரும்பாலோர் தங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர் என்று ஆய்வு மையமான மெர்டேக்கா சென்டர் தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி தொடங்கி 24 ஆம் தேதி வரையில் மெர்டேக்கா சென்டர், நாடு முழுவதும் பலதரப்பட்ட வயதுடைய 1,220 வாக்காளர்களை சந்தித்து ஒரு கருத்து கணிப்பை நடத்தியுள்ளது.
அந்த கருத்து கணிப்பின்படி அன்வார் தலைமையிலான நடப்பு அரசாங்கத்தின் மீது 41 விழுக்காட்டினர் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.
அதேவேளையில் 7 விழுக்காட்டினர், மத்திய அரசாங்கத்திற்கு எதிராக தங்களின் ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளனர் என்று மெர்டேக்கா சென்டர் கூறுகிறது.







