போர்ட்டிக்சன் மாவட்ட போலீஸ் தலைவர் ஒருவர், மாது ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் வகையில் ஆபாச குறுந்தகவல்களை அனுப்பியதாக கூறப்படும் குற்றச்சாட்டை போலீஸ் துறை மறுத்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை முதல் Telegram செயலிலில் பகிரப்பட்டு வரும் அந்த குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று போர்ட்டிக்சன் மாவட்ட போலீஸ் தலைவர் ஐடி ஷாம் முஹமாட் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் அத்தகவல் தீய நோக்கத்தை கொண்டுள்ளது என்று அவர் விளக்கினார்.
இது தொடர்பாக தாங்கள் மேற்கொண்ட பூர்வாங்க புலன் விசாரணையில் அந்த குற்றச்சாட்டில் அடிப்படையில்லை என்பது தெரியவந்துள்ளது என்று ஐடி ஷாம் முஹமாட்தெரிவித்தார்.








