நேற்று மதியம் போகோக் சேனா அருகே கம்போங் புக்கிட் பாயூங்கில் வீசிய புயலில் நகர்ந்து கொண்டு இருந்த காரின் மீது மரம் ஒன்று விழுந்ததில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து மதியம் 3.20 மணியளவில் தங்களுக்கு அவரச அழைப்பு கிடைத்தாக போகோக் சேனா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையச் செயல்பாட்டு அதிகாரி மற்றும் மூத்த தீயணைப்பு அதிகாரி ஷஹ்ரின் முசா தெரிவித்தார்.
சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், மரம் ஹூண்டாய் ரக கார் மீது விழுந்ததைக் கண்டறிந்தனர். இதனால் 74 வயது ஓட்டுநர் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி சுயநினைவு இழந்த நிலையில் கிடந்தார்.
“தீயணைப்பு வீரர்கள் சிறப்பு உபகரணங்கள் மற்றும் புல்டோசரின் உதவியுடன் பாதிக்கப்பட்டவரை காரிலிருந்து வெளியே கொண்டு வந்தனர். இருப்பினும், அந்த முதியவர் இறந்து விட்டார் என்று மருத்துவ அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டதாக ஷஹ்ரின் முசாதெரிவித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


