மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். மேற்கொள்ளும் புலன் விசாரணைகளின் தகவல்கள் கசிவதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்ய வேண்டும் என்று பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவு இன்று போலீசில் புகார் செய்துள்ளது.
தங்களின் பெர்சத்து கட்சிக்குச் சொந்தமான 4 கோடி வெள்ளி சம்பந்தப்பட்ட இரு வங்கி கணக்குகளின் விவரங்கள் கசிந்திருப்பது, நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கஸாலிக்கு எதிரான எஸ்.பி.ஆர்.எம். புலன் விசாரணை முடிவு கசிந்திருப்பது ஆகிய சம்பவங்களை அக்கட்சி தமது போலீஸ் புகாரில் சுட்டிக்காட்டியுள்ளது.
இன்று கோலாலம்பூர் டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்தில், பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் முகமட் ஃபைஸ் ரஹ்மாட் அளித்துள்ள போலீஸ் புகாரில் இதனை தெரிவித்துள்ளார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


