மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். மேற்கொள்ளும் புலன் விசாரணைகளின் தகவல்கள் கசிவதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்ய வேண்டும் என்று பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவு இன்று போலீசில் புகார் செய்துள்ளது.
தங்களின் பெர்சத்து கட்சிக்குச் சொந்தமான 4 கோடி வெள்ளி சம்பந்தப்பட்ட இரு வங்கி கணக்குகளின் விவரங்கள் கசிந்திருப்பது, நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கஸாலிக்கு எதிரான எஸ்.பி.ஆர்.எம். புலன் விசாரணை முடிவு கசிந்திருப்பது ஆகிய சம்பவங்களை அக்கட்சி தமது போலீஸ் புகாரில் சுட்டிக்காட்டியுள்ளது.
இன்று கோலாலம்பூர் டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்தில், பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் முகமட் ஃபைஸ் ரஹ்மாட் அளித்துள்ள போலீஸ் புகாரில் இதனை தெரிவித்துள்ளார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


