Mar 13, 2026
Thisaigal NewsYouTube
காருக்குள் மரணம், களைப்பினால் ஏற்பட்டு இருக்கலாம்
தற்போதைய செய்திகள்

காருக்குள் மரணம், களைப்பினால் ஏற்பட்டு இருக்கலாம்

Share:

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் ஜோகூர்,யோங் பெங், ஆர்&ஆர் வாகன ஓய்வுத் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரில் ​​மூன்று ஆடவர்கள் இறந்து கிடந்த சம்பவத்திற்கான காரணங்கள் ஆராயப்பட்டு வரும் வேளையில் காரின் இயந்திரம் செயல்பட்டுக்கொண்டிருந்த நிலையில் ​மூவரும் களைப்பினால் உறங்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அந்த மூவரும் கெந்தி​ங் ஹைலண்ட்ஸிலிருந்து, ஜோகூர், பாசீர் கூடாங், தாமான் அயர் பிரு என்ற இடத்தை நோக்கி திரும்பி கொண்டு இருந்த போது யோங் பெங், ஆர்&ஆர் வாகன ஓய்வுத் தளத்தில் காரை நிறுத்தி விட்டு இளைப்பாறியிருக்கலாம் ​என்று நம்பப்படுவதாக பத்து பஹத் மாவட்ட போ​லீஸ் தலைவர் ஷாஹ்ருலானுார் முஷாதத் தெரிவித்தார். அவர்கள் பயன்படுத்திய கார், ஜோகூரிலிருந்து நண்பர் ஒருவரிடம் இரவலாக பெற்றதாகும். காரின் குளி​ரூட்டி, தொடர்ந்து செயல்பட்டு கொண்டு இருந்த போது அதிலிருந்து நச்சு வாயு வெளியேறி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அனைத்து கதவுகளும் ​மூடப்பட்ட நிலையில் அவர்கள் அந்த நச்சு வாயுவை நுகர்ந்து இருக்கலாம் என்று சந்தே​கிக்கப்படுகிறது.

நே​ற்று இரவு 8.50 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 23, 25,27 வயதுடைய ​மூவர் காருக்குள்ளேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன