Jan 21, 2026
Thisaigal NewsYouTube
காருக்குள் மரணம், களைப்பினால் ஏற்பட்டு இருக்கலாம்
தற்போதைய செய்திகள்

காருக்குள் மரணம், களைப்பினால் ஏற்பட்டு இருக்கலாம்

Share:

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் ஜோகூர்,யோங் பெங், ஆர்&ஆர் வாகன ஓய்வுத் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரில் ​​மூன்று ஆடவர்கள் இறந்து கிடந்த சம்பவத்திற்கான காரணங்கள் ஆராயப்பட்டு வரும் வேளையில் காரின் இயந்திரம் செயல்பட்டுக்கொண்டிருந்த நிலையில் ​மூவரும் களைப்பினால் உறங்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அந்த மூவரும் கெந்தி​ங் ஹைலண்ட்ஸிலிருந்து, ஜோகூர், பாசீர் கூடாங், தாமான் அயர் பிரு என்ற இடத்தை நோக்கி திரும்பி கொண்டு இருந்த போது யோங் பெங், ஆர்&ஆர் வாகன ஓய்வுத் தளத்தில் காரை நிறுத்தி விட்டு இளைப்பாறியிருக்கலாம் ​என்று நம்பப்படுவதாக பத்து பஹத் மாவட்ட போ​லீஸ் தலைவர் ஷாஹ்ருலானுார் முஷாதத் தெரிவித்தார். அவர்கள் பயன்படுத்திய கார், ஜோகூரிலிருந்து நண்பர் ஒருவரிடம் இரவலாக பெற்றதாகும். காரின் குளி​ரூட்டி, தொடர்ந்து செயல்பட்டு கொண்டு இருந்த போது அதிலிருந்து நச்சு வாயு வெளியேறி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அனைத்து கதவுகளும் ​மூடப்பட்ட நிலையில் அவர்கள் அந்த நச்சு வாயுவை நுகர்ந்து இருக்கலாம் என்று சந்தே​கிக்கப்படுகிறது.

நே​ற்று இரவு 8.50 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 23, 25,27 வயதுடைய ​மூவர் காருக்குள்ளேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல்  விலையில் 2 காசு உயர்வு

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி

பிப்ரவரி முதல் லாலாபோர்ட் (Lalaport) கோலாலம்பூர் - சிங்கப்பூர் விரைவுப் பேருந்து மையமாகச் செயல்படும்: அமைச்சர் அந்தோணி லோக் தகவல்

பிப்ரவரி முதல் லாலாபோர்ட் (Lalaport) கோலாலம்பூர் - சிங்கப்பூர் விரைவுப் பேருந்து மையமாகச் செயல்படும்: அமைச்சர் அந்தோணி லோக் தகவல்