கோலா பிலா,அக்டோபர் 06-
கம்போங் செனலிங் அருகே உள்ள ஒரு வீட்டில் சனிக்கிழமை மாலை அச்சம்பவம் நிகழ்ந்தது .மனநலம் பாதிக்கப்பட்டவர் என நம்பப்படும் மகன் தற்கொலைக்கு முயன்ற போது 65 வயது தந்தை அவனை ஆசுவாசப்படுத்த முயன்றுள்ளார் .
அப்போது மேலும் ஆவேசமடைந்த 32 வயது மகன் தந்தையை கத்தியால் குத்திக் கொன்றான்.பின்னர் அங்கிருந்து காரில் சென்றவன் செனலிங் சிற்றூரில் சாலையோரமாக வாயில் நுரை தள்ளி இறந்துகிடந்தான்.
தந்தை மற்றும் மகனின் சடலங்கள் சவபரிசோதனைக்காக சிரம்பான் துவாங்கு ஜாபர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.








