நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹாருனுக்கான ஆதரவை அம்னோவின் 14 சட்டமன்ற உறுப்பினர்களும் மீட்டுக் கொண்டது, அவர்கள் தன்னிச்சையாக எடுத்த முடிவு என்று பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோ ஸ்ரீ அகமது ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர்களுக்கு முன்னரே தகவல் தெரிந்திருந்தாலும், இந்த விவகாரம் மற்றும் அதன் அரசியல் தாக்கங்கள் குறித்து பாரிசான் நேஷனல் மற்றும் அம்னோ தலைமைத்துவம் ஆலோசிக்கும் என்று அவர் கூறினார்.
விரைவில் அந்த 14 சட்டமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து விளக்கம் கேட்கவுள்ளதாகவும், இது குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் ஜாஹிட் ஹமிடி குறிப்பிட்டார்.








