கடந்த வாரம் வியாழக்கிழமை சுங்கை பூலோ, எல்மினாவில் பத்து பேர் உயிரிழந்த இலகு ரக விமான விபத்து தொடர்பாக இதுவரையில் பத்துக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்தார்.
அந்த இலகு ரக விமானம் விழுந்து நொறுங்கிய காட்சியை பதிவு செய்த காணொளியை கொண்டுள்ளவர்கள், விமான நிறுவனப்பொறுப்பாளர்கள் மற்றும் மலேசிய வான் போக்குவரத்து இலாகா அதிகாரிகள் ஆகியோர் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டவர்களில் அடங்குவர் என்று டத்தோ உசேன் உமர் கான் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விசாரணையில் முன்னேற்றம் ஏதும் தென்பட்டுள்ளதா? என்பதை கண்டறிய மலேசிய வான் போக்குவரத்துத்துறையின் அடுத்த உத்தரவிற்காக போலீசார காததிருப்பதாக அவர் தெவித்தார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


