பினாங்கு தாவரவியல் பூங்கா நுழைவாயிலுக்கு அருகில் 1990-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த புகழ்பெற்ற 'வாட்டர்ஃபால்' சிற்றுண்டிச்சாலை இன்று அதிகாரிகளால் இடிக்கப்பட்டது.
வாடகை நிலுவைத் தொகை மற்றும் இடமாற்றம் தொடர்பாகப் பலமுறை பேச்சுவார்த்தைகள் நடத்தியும், உடன்பாடு எட்டப்படாததால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பினாங்க் முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் தெரிவித்தார். இப்பிரச்சனைக்குத் தீர்வு காண கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் பல இடமாற்று வாய்ப்புகள் வழங்கப்பட்டும், அவை சிற்றுண்டிச்சாலை நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்டன.
இறுதியாக, கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி வழங்கப்பட்ட வெளியேற்ற நோட்டீஸைத் தொடர்ந்து இன்று இந்த அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 35 ஆண்டுகாலப் பாரம்பரியம் கொண்ட இந்த உணவகம் இடிக்கப்பட்டது சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.








