Sep 16, 2026
Thisaigal NewsYouTube
மீன் பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு – மேலும் 2 பேரைத் தேடும் பணி தீவிரம்
தற்போதைய செய்திகள்

மீன் பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு – மேலும் 2 பேரைத் தேடும் பணி தீவிரம்

Share:

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போன மீன்பிடி ஆர்வலர்கள் மூவரில் ஒருவர், பேராக் ஹூத்தான் மெலிந்தாங் கடற்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மீனவர்கள் சிலர் காலை 8.30 மணியளவில் சடலம் ஒன்று மிதப்பதைக் கண்டு மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட சடலம் 43 வயதான முஹமட் ஷாரில் அப்துல் ரஹ்மான் என்பது உறவினர்கள் மூலம் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அச்சடலமானது பிரேதப் பரிசோதனைக்காக ஷா ஆலாம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட உள்ளது.

இதனிடையே, காணாமல் போன மேலும் இருவரைத் தேடும் பணியில் போலீசார், மலேசிய கடல்சார் அமலாக்க முகமை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, உள்நாட்டு தற்காப்பு படையினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் உதவியுடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே காணாமல் போன 7 மீன்பிடி ஆர்வலர்களில் 4 பேர் நேற்று செகின்சான் கடற்பகுதியில் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இவர்கள் ஞாயிற்றுக்கிழமை கிள்ளான், சுங்கை காப்பார் பகுதியில் உள்ள செமெந்தா படகுக் குழாமில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற போது மாயமாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

பிந்துலு துறைமுகம் சரவாக் அரசாங்கத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது

பிந்துலு துறைமுகம் சரவாக் அரசாங்கத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது

2030-ஆம் ஆண்டிற்குள் 4-ஆவது படைப்பிரிவாக சைபர் படை உருவாக்கப்படும் - மலேசிய ஆயுதப்படை தகவல்

2030-ஆம் ஆண்டிற்குள் 4-ஆவது படைப்பிரிவாக சைபர் படை உருவாக்கப்படும் - மலேசிய ஆயுதப்படை தகவல்

பழுதாகி நின்ற கார் மீது லோரி மோதல்: ஒருவர் பலி, இருவர் படுகாயம்

பழுதாகி நின்ற கார் மீது லோரி மோதல்: ஒருவர் பலி, இருவர் படுகாயம்

செயற்கை நுண்ணறிவுத் திட்டத்தில் 1 லட்சம் மலேசியர்களுக்கு பயிற்சியளிக்க இலக்கு: அமைச்சர் கோபிந்த் சிங் டியோ

செயற்கை நுண்ணறிவுத் திட்டத்தில் 1 லட்சம் மலேசியர்களுக்கு பயிற்சியளிக்க இலக்கு: அமைச்சர் கோபிந்த் சிங் டியோ

பேராவில் உறைவிடப் பள்ளியில் இன்ஃப்ளூயன்சா பாதிப்பு: 46 மாணவர்களுக்கு அறிகுறிகள் கண்டது

பேராவில் உறைவிடப் பள்ளியில் இன்ஃப்ளூயன்சா பாதிப்பு: 46 மாணவர்களுக்கு அறிகுறிகள் கண்டது

2 லட்சம் ரோஹிங்கியா அகதிகளை திருப்பி அனுப்ப முடிவு - மியான்மர் அதிபரை மலேசியா அழைக்கிறார் அன்வார்

2 லட்சம் ரோஹிங்கியா அகதிகளை திருப்பி அனுப்ப முடிவு - மியான்மர் அதிபரை மலேசியா அழைக்கிறார் அன்வார்