May 25, 2026
Thisaigal NewsYouTube
துப்பாக்கியை எடுத்துக்காட்டும் காணொளி வைரலாகி வருகிறது
தற்போதைய செய்திகள்

துப்பாக்கியை எடுத்துக்காட்டும் காணொளி வைரலாகி வருகிறது

Share:

பூச்சோங் ,அக்டோபர் 17-

Food Court உணவகத் தளத்தில் இரு ஆடவர்களுக்கு இடையில் நடைபெற்ற வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளுவின் போது, ஒருவர் கைத்துப்பாக்கியை காற்சட்டையிலிருந்து எடுக்கும் காட்சியைக்கொண்ட காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இரண்டு ஆடவர்களுக்கு இடையில் தள்ளுமுள்ளு ஏற்ளபட்ட போது, பெண் ஒருவர் தலையிட்டு, அவர்களுக்கு இடையிலான மோதலை தடுக்கும் காட்சியும் அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் சில தினங்களுக்கு முன்பு பூச்சோங்கில் உள்ள Food Court உணவகத் தளத்தில் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. உணவகத்தில் புகைப்பிடித்தது தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் வெள்ளைநிற டீ சட்டை அணிந்திருந்த நபர் துப்பாக்கியை உருவியதாக கூறப்படுகிறது.

எனினும் இச்சம்பவம் தொடர்பில் எந்தவொரு தரப்பினரிடமிருந்து போலீஸ் புகார் எதனையும் தாங்கள் பெறவில்லை என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்தார்.

அதேவேளையில் இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் புகார் அளிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

குப்பைக்கிடங்கில் நண்பரைக்கொன்ற பாதுகாவலர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

குப்பைக்கிடங்கில் நண்பரைக்கொன்ற பாதுகாவலர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஓடும் பேருந்தில் ஓட்டுநர் திரவத்தை பாட்டிலில் ஊற்றிய வீடியோ: போலீஸ் விசாரணை

ஓடும் பேருந்தில் ஓட்டுநர் திரவத்தை பாட்டிலில் ஊற்றிய வீடியோ: போலீஸ் விசாரணை

வழிப்பறி, கொள்ளைக் குற்றங்களுக்குக் கடுமையான தண்டனை அவசியம்: மேல்முறையீட்டு நீதிமன்றம்

வழிப்பறி, கொள்ளைக் குற்றங்களுக்குக் கடுமையான தண்டனை அவசியம்: மேல்முறையீட்டு நீதிமன்றம்

கின்னஸ் டிராஃப்ட் தரத்தை நுகர்வோரே மதிப்பிடலாம்; மலேசியாவில் 'ரேட் யுவர் பின்ட்' புதிய பிரச்சாரம் அறிமுகம்!

கின்னஸ் டிராஃப்ட் தரத்தை நுகர்வோரே மதிப்பிடலாம்; மலேசியாவில் 'ரேட் யுவர் பின்ட்' புதிய பிரச்சாரம் அறிமுகம்!

போர்ட்டிக்சன் படகுத்துறையில் முதலைத் தாக்குதலிலிருந்து முதியவர் உயிர் தப்பினார்

போர்ட்டிக்சன் படகுத்துறையில் முதலைத் தாக்குதலிலிருந்து முதியவர் உயிர் தப்பினார்

விசாக தினத்தை முன்னிட்டு செக் கியா ஈன் ஆலயத்தில் பல்லாயிரக்கணக்கானோருக்கு இலவச உணவு வழங்கப்பட்டது

விசாக தினத்தை முன்னிட்டு செக் கியா ஈன் ஆலயத்தில் பல்லாயிரக்கணக்கானோருக்கு இலவச உணவு வழங்கப்பட்டது