Mar 19, 2026
Thisaigal NewsYouTube
நாட்டின் தோற்றத்திற்கு அவமதிப்பு ஏற்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

நாட்டின் தோற்றத்திற்கு அவமதிப்பு ஏற்பட்டுள்ளது

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.28-

மலேசியாவில் ஆசியான் உச்சநிலை மாநாடு நடைபெற்று கொண்டு இருக்கும் வேளையில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் ஏரோடிரேன் ரயில் பழுதடைந்து போனது, நாட்டின் தோற்றத்திற்கு எதிர்மறையான தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அம்னோ முன்னாள் உச்சமன்ற உறுப்பினர் இஷாம் ஜாலில் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுத் தலைவர்களும், பேராளர்களும், ஊடகவியலாளர்களும் அதிகளவில் கோலாலம்பூர் தலைநகரில் குவிந்துள்ள நிலையில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் புறப்பாடு பகுதியிலிருந்து விமான முனையங்களுக்கு பயணிகளை ஏற்றி செல்லும் ஏரோடிரேன் பழுதடைந்து இருப்பது பயணிகளை நிச்சயம் அவதிக்குள்ளாக்கி இருக்கும்.

அதுமட்டுமன்றி ஒரு நவீனமயத்தை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் இவ்வேளையில் அதன் தோற்றத்திற்கும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை