Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கிளந்தான் காவல்துறை தலைவரின் கருத்துக்கு பெண்கள் அமைப்பு கடும் கண்டனம்!
தற்போதைய செய்திகள்

கிளந்தான் காவல்துறை தலைவரின் கருத்துக்கு பெண்கள் அமைப்பு கடும் கண்டனம்!

Share:

பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர்.24-

சம்மதத்துடன் உறவு கொள்ளும் வயது குறைந்த பெண்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூறிய கிளந்தான் காவல்துறை தலைவர் டத்தோ முகமட் யுசோஃப் மாமாட்டின் கருத்துக்கு, பெண்கள் உரிமைகளுக்கான கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இத்தகைய கருத்துக்கள் பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாகச் சித்தரிக்கும் நிலையை வலுப்படுத்துவதோடு, குழந்தைகளின் நலனுக்காக கொண்டு வரப்பட்ட குழந்தைகள் சட்டம் 2001-ஐ புறக்கணிக்கிறது என்றும் அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.

அதே வேளையில், காவல்துறை உயரதிகாரிகளுக்கு குழந்தைகளின் உரிமைகள், பாலினக் கண்ணோட்டங்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, முறையாகப் பயிற்சி அளிக்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

சிறார் பாலியல் செயல்பாடுகளை முறையாகக் கையாள்வதற்கும், தடுப்பதற்கும், குழந்தைக் கல்வி, சமூக விழிப்புணர்வு மற்றும் வலுவான சமூகப் பாதுகாப்புடன் கூடிய அணுகுமுறைகள் அவசியம் என்றும் அவ்வமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.

Related News

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிராண்டுகளுக்கு இடையே சமநிலையான போட்டி உறுதிச் செய்யப்படுகிறது

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிராண்டுகளுக்கு இடையே சமநிலையான போட்டி உறுதிச் செய்யப்படுகிறது

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி  அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்