Mar 21, 2026
Thisaigal NewsYouTube
கிளந்தான் காவல்துறை தலைவரின் கருத்துக்கு பெண்கள் அமைப்பு கடும் கண்டனம்!
தற்போதைய செய்திகள்

கிளந்தான் காவல்துறை தலைவரின் கருத்துக்கு பெண்கள் அமைப்பு கடும் கண்டனம்!

Share:

பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர்.24-

சம்மதத்துடன் உறவு கொள்ளும் வயது குறைந்த பெண்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூறிய கிளந்தான் காவல்துறை தலைவர் டத்தோ முகமட் யுசோஃப் மாமாட்டின் கருத்துக்கு, பெண்கள் உரிமைகளுக்கான கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இத்தகைய கருத்துக்கள் பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாகச் சித்தரிக்கும் நிலையை வலுப்படுத்துவதோடு, குழந்தைகளின் நலனுக்காக கொண்டு வரப்பட்ட குழந்தைகள் சட்டம் 2001-ஐ புறக்கணிக்கிறது என்றும் அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.

அதே வேளையில், காவல்துறை உயரதிகாரிகளுக்கு குழந்தைகளின் உரிமைகள், பாலினக் கண்ணோட்டங்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, முறையாகப் பயிற்சி அளிக்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

சிறார் பாலியல் செயல்பாடுகளை முறையாகக் கையாள்வதற்கும், தடுப்பதற்கும், குழந்தைக் கல்வி, சமூக விழிப்புணர்வு மற்றும் வலுவான சமூகப் பாதுகாப்புடன் கூடிய அணுகுமுறைகள் அவசியம் என்றும் அவ்வமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து