Malaysia My Second Home (MM2H) என்ற திட்டத்திற்கு புதுபிக்கப்பட்ட நிபந்தனையாக சீனாவிலிருந்து விண்ணப்பிப்பவர்களுக்கு இயல்பாகவே நிரந்தர குடியிருப்பு அந்தஸ்து (PR) வழங்கப்படும் என்று மஸ்ஜிட் தானா எம்பி, டத்தோ மாஸ் எர்மெயித்தி சம்சுடின், கூறியிருந்ததை பல அமைச்சர்கள் சாடியுள்ளனர்.
இத்திட்டம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாக கொள்வதுடன் விண்ணப்பதாரர்கள் பிஆர் ஒப்புதலை பெறுவதற்கு முன் முழுமையான ஆய்வுகளில் உட்படுத்தப்படுவர் என்று சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோ ஶ்ரீ தியோங் கிங் சிங் தெரிவித்திருந்தார்.
ஒவ்வொரு விண்ணப்பதாரரும் குடியுரிமையை பொருட்படுத்தாமல், பிஆர் விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவதற்கு முன் Platinum பிரிவில் உள்ள விதிமுறைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று டத்தோ ஶ்ரீ தியோங் கூறினார்.
மாஸ் எர்மெயித்தி -வின் கருத்துக்கள் பல இடங்களில் அறியாமையை காட்டுகின்றதாகவும் இவை அரசியல் கவனத்தை பெறுவதற்கு ஒரு சிறந்த வழியாகும் என்று டத்தோ ஶ்ரீ தியோங் ஓர் அறிக்கையில் வெளியிட்டிருந்தார்.








