ஜொகூர், ஆகஸ்ட் 06-
தாய், மகன் மற்றும் காதல் ஜோடி ஆகியோரை உட்படுத்திய ஐவர் கைது செய்யப்பட்டது மூலம் ஜோகூர்பாருவில் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் கும்பலை போலீசார் வெற்றிகரமாக முடியடித்துள்னர்.
இக்கும்பல் முறியடிக்கப்பட்டது மூலம் 18 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் M. குமார் தெரிவித்தார்.
கடந்த ஜுலை 31 ஆம் தேதி, ஜோகூர்பாரு மற்றும் செரி ஆலம் ஆகிய பகுதிகளில் ஜோகூர் மாநில போதைப்பொருள் துடைத்தொழிப்பு போலீசார் மேற்கொண்ட மூன்று வெவ்வேறு சோதனை நடவடிக்கைகளில் 28 க்கும் 59 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூன்று ஆண்களும், இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
போதைப்பொருளை பதுக்கி வைப்பதற்கும், அதனை பெட்டலமாக மடிப்பதற்கும் தரை வீடு ஒன்றை இக்கும்பல் கிடங்காக பயன்படுத்தி வந்துள்ளது என்று இன்று ஜோகூர்பாருவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் கமிஷனர் குமார் விவரித்தார்.








