பதின்ம வயதுடைய இரண்டு பெண்கள் பயணித்த மோட்டார் சைக்கிள், கொள்கலன் லோரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவரும் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் நேற்று முன்னிரவு 11.18 மணியளவில் ஈப்போ - கோலாலம்பூர் சாலையின் 121 ஆவது கிலோ மீட்டரில் சிலிம் ரீவர் அருகில், கம்போங் கெளாவார் என்ற இடத்தில் நிகழ்ந்தது. 19 வயதுடைய மிமி நூர்வஹீடா நூர் கமர் ஹிஷாம் மற்றும் நூர் நபிலா ரொஸ்டி என்ற இரு பெண்கள் இச்சம்பவத்தில் மாண்டதாக போலீசார் அடையாளம் கூறினர்.
அந்த கொள்கலன் லோரி, திடீரென்று சாலையின் யூ வளைவில் திரும்பிய போது, வேகக்கட்டுப்பாட்டை இழந்த அப்பெண்கள், மோட்டார் சைக்கிளுடன் அந்தப் பார வண்டியின் அடியில் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே மாண்டார். மற்றொருவர், சிலிம் ரீவர் மருத்துவமனையில் உயிரிழந்ததாக முவாலிம் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் ஹஸ்னி முகமட் நசீர் தெரிவித்தார்.

Related News

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை


