பதின்ம வயதுடைய இரண்டு பெண்கள் பயணித்த மோட்டார் சைக்கிள், கொள்கலன் லோரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவரும் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் நேற்று முன்னிரவு 11.18 மணியளவில் ஈப்போ - கோலாலம்பூர் சாலையின் 121 ஆவது கிலோ மீட்டரில் சிலிம் ரீவர் அருகில், கம்போங் கெளாவார் என்ற இடத்தில் நிகழ்ந்தது. 19 வயதுடைய மிமி நூர்வஹீடா நூர் கமர் ஹிஷாம் மற்றும் நூர் நபிலா ரொஸ்டி என்ற இரு பெண்கள் இச்சம்பவத்தில் மாண்டதாக போலீசார் அடையாளம் கூறினர்.
அந்த கொள்கலன் லோரி, திடீரென்று சாலையின் யூ வளைவில் திரும்பிய போது, வேகக்கட்டுப்பாட்டை இழந்த அப்பெண்கள், மோட்டார் சைக்கிளுடன் அந்தப் பார வண்டியின் அடியில் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே மாண்டார். மற்றொருவர், சிலிம் ரீவர் மருத்துவமனையில் உயிரிழந்ததாக முவாலிம் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் ஹஸ்னி முகமட் நசீர் தெரிவித்தார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


