சுங்கை சிப்புட்,ஆகஸ்ட் 19
வாடகை வீட்டில் இருந்த வாடகைதாரர் ஒருவர் தனது வீட்டு உரிமையாளரைக் கத்தியால் குத்திய குற்றத்தை, இன்று பேராக், சுங்கை சிபுட் மேஜஸ்ட்ரெட் நீதிமன்றத்தில் ஒப்புக்கொன்டார்.
கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி, காலை 11 மணிக்கு கம்புங் லாசா அருகே உள்ள வீடொன்றில், 44 வயது முஹம்மது ஹைரோல்னிசம் ஒஸ்மான்-னைக் கத்தியால் குத்தி காயப்படுதியதாக 40 வயது முகமது ஷா ரிசல் யாங், நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார்.
இந்நிலையில், குற்றம் சுமத்தப்பட்டவர் இரப்பர் மரம் சீவும் தொழிலாளி என்பதால், நீதிமன்றம் அவர் ஒருவர் உத்தரவாதத்துடன் 3 ஆயிரத்து 500 ரிங்கிட் பிணை தொகை செலுத்தி பிணையில் வெளியேற அனுமதி வழங்கியது.
பின்னர், அந்த வழக்கின் மறுசெவிமடுப்பு அக்டோபர் 21 ஆம் தேதிக்கு ஒத்துவைக்கப்பட்டது.
காயமடைந்த முஹம்மது ஹைரோல்னிசம் ஒஸ்மான் சுங்கை சிபுட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.








