கெடா மாநிலத்தில் அரிய மண் சுரங்க நடவடிக்கை மோசடி தொடர்பில் தமக்கு தொடர்பு இல்லை என்று மாநில மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் நூர் மறுத்து வந்த போதிலும் அந்த அரிய மண் வீற்றிருக்கும் கெடா, சிஸ், புக்கிட் எங்காங் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் நடைபெறும் அந்த சட்டவிரோத சுரங்க நடவடிக்கையை கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி சனூசி பார்வையிட்டுள்ளார் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
அந்த அரிய மண் பகுதிக்கு சனூசி வருகை புரிந்துள்ளார் என்பதை காட்டும் புகைப்படங்களையும் அமைச்சர் சைபுடின் இன்று வெளியிட்டுள்ளார். கெடா மாநிலத்தில் அரிய மண் தொடர்பான சட்டவிரோத சுரங்க நடவடிக்கை நடைபெறுகிறது என்பது மாநில மந்திரி புசார் என்ற முறையில் சனூசிக்கு நன்கு தெரியும் என்பதற்கு இந்தப் புகைப்படங்களே சான்றாகும் என்று சைபுடீன் கூறுகிறார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை


