கெடா மாநிலத்தில் அரிய மண் சுரங்க நடவடிக்கை மோசடி தொடர்பில் தமக்கு தொடர்பு இல்லை என்று மாநில மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் நூர் மறுத்து வந்த போதிலும் அந்த அரிய மண் வீற்றிருக்கும் கெடா, சிஸ், புக்கிட் எங்காங் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் நடைபெறும் அந்த சட்டவிரோத சுரங்க நடவடிக்கையை கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி சனூசி பார்வையிட்டுள்ளார் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
அந்த அரிய மண் பகுதிக்கு சனூசி வருகை புரிந்துள்ளார் என்பதை காட்டும் புகைப்படங்களையும் அமைச்சர் சைபுடின் இன்று வெளியிட்டுள்ளார். கெடா மாநிலத்தில் அரிய மண் தொடர்பான சட்டவிரோத சுரங்க நடவடிக்கை நடைபெறுகிறது என்பது மாநில மந்திரி புசார் என்ற முறையில் சனூசிக்கு நன்கு தெரியும் என்பதற்கு இந்தப் புகைப்படங்களே சான்றாகும் என்று சைபுடீன் கூறுகிறார்.

Related News

300 மில்லியன் ரிங்கிட் முதலீட்டு மோசடி: 'டான் ஸ்ரீ' ஒருவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது

மொழிப் பிரச்சினைகள் குறித்த வாக்குவாதங்களை நிறுத்துங்கள்: பிரதமர் அன்வார் வேண்டுகோள்

பங்சாரில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்: ஆடவருக்கு 2,000 ரிங்கிட் அபராதம்

போலீஸ்காரர் உயிரிழந்த விபத்து: 80 வயது மூதாட்டி கைது

மலேசியாவின் AI, 5G மற்றும் டிஜிட்டல் மாற்றத் திட்டங்களை முன்னெடுப்பதில் பீடுநடை போடுகிறார் கோபிந்த் சிங் டியோ


