மலேசிய சிங்கப்பூர் இரு நாடுகளிடையே தொடர்புடைய வளர்ச்சியை குறித்து, 10வது முறையாக நடத்தப்படவுள்ள இந்த அமர்வுக்கு, பிரதமர் உட்பட வெளியுறவு அமைச்சர், கணிமம் வளம், சுற்றுச் சூழல் வானிலை அமைச்சர், வர்த்தகம் மற்றும் தொழித்துறை அமைச்சர், போக்குவரத்து அமைச்சர் உட்பட 8 அமைச்சர்கள் கொண்ட குழு இந்த அமர்வில் கலந்து கொள்ளவிருகின்றன.
2007 ஆம் ஆண்டு தொடங்கி, நடத்தப்படும் இந்த அமர்வில் முதல் முறையாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்டு சிங்கப்பூர் பிரதமருடன் இரு நாடுகளின் மேம்பாட்டு திட்டம் குறித்து கலந்துரையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.







