Feb 5, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் தனித்து வாழும் தாயார் கொலை வழக்கு: இரண்டு ஆண்கள் கைது
தற்போதைய செய்திகள்

பினாங்கில் தனித்து வாழும் தாயார் கொலை வழக்கு: இரண்டு ஆண்கள் கைது

Share:

ஜார்ஜ்டவுன், பிப்ரவரி.05-

பினாங்கு, சுங்கை டூவா பகுதியில் உள்ள ஶ்ரீ மூர்னி அடுக்குமாடி வீட்டுப் பகுதியில் 41 வயது மதிக்கத்தக்க தனித்து வாழும் தாயார் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு ஆடவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று மதியம் 1.40 மணியளவில், கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் அந்த மாது தனது வீட்டின் படுக்கையறையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இச்சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே 40 மற்றும் 45 வயதுடைய இரு சந்தேக நபர்களைப் போலீசார் கைது செய்தனர். இதில் ஒருவர் Ketamine போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தெரிந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்கள் இருவரும் தற்போது 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த இப்பெண், தனது 15 வயது மகனுடன் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். அவரது இந்தப் படுகொலை குறித்து பினாங்கு மாநிலக் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related News

அல்தான்துயா கொலை வழக்கு: 4.7 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டுத் தொகையை அரசாங்கத்திடம் திருப்பி ஒப்படைத்தது குடும்பம்

அல்தான்துயா கொலை வழக்கு: 4.7 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டுத் தொகையை அரசாங்கத்திடம் திருப்பி ஒப்படைத்தது குடும்பம்

பழைய லாரியை 'போதைப் பொருள் கிடங்காக' மாற்றிய கும்பல்: ஈப்போவில் 32 கிலோ கஞ்சா பறிமுதல்

பழைய லாரியை 'போதைப் பொருள் கிடங்காக' மாற்றிய கும்பல்: ஈப்போவில் 32 கிலோ கஞ்சா பறிமுதல்

தலைமறைவான ‘கேப்டன் பிரபா’ கும்பலின் முக்கியப் புள்ளி  பேங்காக்கில் அதிரடியாகக் கைது: புக்கிட் அமான்  நடவடிக்கை

தலைமறைவான ‘கேப்டன் பிரபா’ கும்பலின் முக்கியப் புள்ளி பேங்காக்கில் அதிரடியாகக் கைது: புக்கிட் அமான் நடவடிக்கை

மித்ரா  திட்டத்தின் கீழ் 1 லட்சம் வெள்ளி நிதியுதவி மீண்டும் தொடக்கம்: அமைச்சர் ஆர். ரமணன் அறிவிப்பு

மித்ரா திட்டத்தின் கீழ் 1 லட்சம் வெள்ளி நிதியுதவி மீண்டும் தொடக்கம்: அமைச்சர் ஆர். ரமணன் அறிவிப்பு

ஜூன் மாதத்திற்குள் எல்ஆர்டி3 ஷா ஆலாம் தடம் தொடக்கம்: அமைச்சர் அந்தோணி லோக் உறுதி

ஜூன் மாதத்திற்குள் எல்ஆர்டி3 ஷா ஆலாம் தடம் தொடக்கம்: அமைச்சர் அந்தோணி லோக் உறுதி

அடுக்குமாடிக் குடியிருப்பில் புலியை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டு: தொழிலதிபருக்கு 2 ஆண்டுகள் சிறை, 3 லட்சம் ரிங்கிட் அபராதம்

அடுக்குமாடிக் குடியிருப்பில் புலியை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டு: தொழிலதிபருக்கு 2 ஆண்டுகள் சிறை, 3 லட்சம் ரிங்கிட் அபராதம்

பினாங்கில் தனித்து வாழும் தாயார் கொலை வழக்கு: இரண்டு ஆண்க... | Thisaigal News