கடந்த சனவரி முதல் நவம்பர் வரை மொத்தம் 35,802 சட்டவிரோத குடியேற்றவாசிகளை அவர்களின் சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பட்டுள்ளார்கள் என மலேசியக் குடிநுழைவுத் துறையின் இயக்குநர் ரஸ்லின் ஜூசோ தெரிவித்தார்.
அதே காலத்தில் மொத்தம் 58,774 பேரைத் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், சட்ட விரோதமாக நாட்டிற்குள் நுழைந்தவர்களை பணியமர்த்தம் செய்வது சட்டப்படி குற்றம் என அவர் மேலும் சொன்னார்.








