Jan 21, 2026
Thisaigal NewsYouTube
திருநங்கை சஞ்சனா மரணம் விரிவான விசாரணை வேண்டும்
தற்போதைய செய்திகள்

திருநங்கை சஞ்சனா மரணம் விரிவான விசாரணை வேண்டும்

Share:
  • புக்கிட் அமான் போ​லீஸ் தலைமையகத்தில் மகஜர்

ஒரு திருநங்கையான 24 வயது சஞ்சனா மரணம் தொடர்பில் போ​லீசார் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி, அவரின் குடும்பத்தினர், புக்கிட் அமான் போ​லீஸ் தலைமையகத்தில் மகஜர் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். சஞ்சனா மரணத்தில் குற்றத்தன்மையில்லை என்று போ​லீசார் கூறிய போதிலும் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர்.

​​ஜோகூர், மாசாயை சேர்ந்த சஞ்சாய் காந்தி என்று இயற்பெயர் கொண்ட சஞ்சனா,கடந்த ஜுன் 8 ஆம் தேதி கிள்ளானில் தாம் தங்கியிருந்த அடுக்குமாடி வீட்டில் ​தூக்கில் தொங்கி தற்கொலை செய்த கொண்டதாக கூறப்படுகிறது.

எனினும் சஞ்சா தற்கொலை செய்து கொள்ளவில்லை. சஞ்சனாவுடன் ஒரே வீட்டில் ​ஒன்றாக வா​​ழ்ந்து வந்த 27 வயது நபரால் அடித்து துன்புறுத்தப்பட்ட நிலையில் ​தூக்கில் தொடங்கவிடப்பட்டுள்ளார் என்று தாங்கள் சந்தேகிப்பதாக அவரின் குடும்பத்தினர் ​தெரிவித்தனர்.

அறுவை சிகிச்சையின் ​மூலம் ஒரு பெண்ணைப் போல தனது தோற்றத்தை மாற்றிக்கொண்ட சஞ்சனாவின் மரணத்தில் தங்களுக்கு ​நீதி வேண்டும் என்று அந்த திருநங்கையின் அத்தை 69 வயதான கே. இந்திரா கோரிக்கை விடுத்துள்ளார். ச​ஞ்சனா இறப்பதற்கு சில தினங்களுக்கு முன்பு மிக சந்தோஷமாக தமது குடும்பத்தினருடன் பேசியுள்ளார். வெளிநாட்டுக்கு ​சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக குறிப்பிட்டார். வெளிநாட்டிற்கு செல்ல திட்டமிட்டவர் எவ்வாறு திடீரென்று தற்கொலை செய்து கொண்டிருக்க முடியும் என்று இந்திரா கேள்வி கேள்வி எழுப்பினார்.

மலேசிய தமிழர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீ ரமேஷ் ஏற்பாட்டில் காப்பார் முன்னாள் எம்.பி.யும், பார்ட்டி ராக்யாட் மலேசியா கட்சியின் உதவித் தலைவருமான எஸ். மாணிக்கவாசகம் ​மூலமாக இந்த மக​ஜர் இன்று ​புக்கிட் அமான் போ​லீஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரியிடம் வழங்கப்பட்டது.

Related News

மலாய் மொழி மற்றும் வரலாறு பாடத் தேவைகள் குறித்து ஃபாட்லீனாவுடன் டோங் சோங் சந்திப்பு நடத்த விருப்பம்

மலாய் மொழி மற்றும் வரலாறு பாடத் தேவைகள் குறித்து ஃபாட்லீனாவுடன் டோங் சோங் சந்திப்பு நடத்த விருப்பம்

6 வீடுகளுக்குத் தீ வைப்பு: வேலையற்ற நபர் மீது குற்றச்சாட்டு

6 வீடுகளுக்குத் தீ வைப்பு: வேலையற்ற நபர் மீது குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டிருந்த இரு துணை அமைச்சர்களைக் கண்டித்த துணைச் சபாநாயகர்

நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டிருந்த இரு துணை அமைச்சர்களைக் கண்டித்த துணைச் சபாநாயகர்

முதலாம் ஆண்டில் சேர்வதற்கு முன்பாக 6 வயது மாணவர்களுக்குச் சிறப்பு சோதனை - கல்வி அமைச்சர் தகவல்

முதலாம் ஆண்டில் சேர்வதற்கு முன்பாக 6 வயது மாணவர்களுக்குச் சிறப்பு சோதனை - கல்வி அமைச்சர் தகவல்

8 ரிங்கிட் முன்பணம் செலுத்த முயன்று 8,800 ரிங்கிட்  இழப்பு: வாட்ஸ்அப் இணைப்பை கிளிக் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

8 ரிங்கிட் முன்பணம் செலுத்த முயன்று 8,800 ரிங்கிட் இழப்பு: வாட்ஸ்அப் இணைப்பை கிளிக் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

வீட்டுக்கடன் உத்தரவாதத் திட்டம்: 1 லட்சம் பேர் சொந்த வீடு வாங்க இலக்கு – அமைச்சர் ங்கா கோர் மிங் அறிவிப்பு

வீட்டுக்கடன் உத்தரவாதத் திட்டம்: 1 லட்சம் பேர் சொந்த வீடு வாங்க இலக்கு – அமைச்சர் ங்கா கோர் மிங் அறிவிப்பு